You are currently viewing 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவசாயிகள் போராட்டத்தை கைவிட மோடி வேண்டுகோள்

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவசாயிகள் போராட்டத்தை கைவிட மோடி வேண்டுகோள்

உ .பி: மகோபா பகுதியில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். முன்னதாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்
அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள் ! நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே ,அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம். ஆனால், புதிய வேளாண் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பபட்டது. இது குறித்து பல்வேறு விவசாயிகள் புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பாராளுமன்றம் கூட்டத்தொடரில் இந்த சட்டம் திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிட மோடி வேண்டுகோள்.